புதிய வகை கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளை அணுக ஆட்சியர் வேண்டுகோள்
புதிய வகை கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெறவும், ஆட்சியர் விஷ்ணு வேண்டுகோள்.
HIGHLIGHTS
புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட நெல்லை ஆட்சியர் விஷ்ணு வேண்டுகோள்.
புதியவகை உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. இது டெல்டா வைரஸ் போன்ற பிற தொற்று வகைகளை போலவே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வைரஸ் தொற்றின் அறிகுறிகளான அதிக உடல் சோர்வுகள், தொண்டையில் வலி, மிதமான உடல் தசை வலி, வரட்டு இருமல், மிதமான காய்ச்சல் போன்றவை தென்பட்டால் காலதாமதமின்றி அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு மருத்துவமனைகளையும், அனுகி உரிய சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியினை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தடுப்பூசியினை செலுத்திக்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை பெறலாம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு நோய் தொற்றின் தீவிரத்திலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.