நெல்லையில் அரசு மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மானியத்துடன் ஆடுகள் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் விண்ணப்பம்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்துடன் ஆடுகள் பெறும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் அளிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு 900 பயனாளிகள் பயனடையும் வகையில் ஊரக பகுதியில் வசிக்கும் 60 வயதிற்கு உட்பட்ட ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். முந்தைய ஆண்டுகளில் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்களில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி 09.12.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கேட்டுக்கொண்டுள்ளார்.