/* */

பராமரிப்பு பணிகள்- ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள்- ரயில்கள் ரத்து
X

திருநெல்வேலி, குருவாயூர் விரைவு ரயில்கள் மதுரை மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களோடு நிறுத்தம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில்,மதுரை, விருதுநகர், துலுக்கப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்காணும் ரயில்கள் பகுதி மற்றும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.02627/8 திருச்சி- திருவனந்தபுரம் சென்ட்ரல்- திருச்சி இன்டர்சிட்டி விரைவு வண்டி மார்ச் 21 முதல் 30 ம் தேதி வரை முழுதுமாக ரத்து செய்யப்படுகிறது.சென்னை எழும்பூர்- நாகர்கோவில்- சென்னை எழும்பூர் விரைவு வண்டி மார்ச் 25,26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர்- குருவாயூர்- சென்னை எழும்பூர் சென்னை- திருநெல்வேலி இடையே மார்ச் 20 முதல் 30 ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அது போல் நாகர்கோவில்- கோயம்புத்தூர்- நாகர்கோவில் விரைவு வண்டி மதுரை நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மார்ச் 20 முதல் 30 ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர் திருநெல்வேலி அதிவேக விரைவு வண்டி மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மார்ச் 26 முதல் 30 ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூர்- செங்கோட்டை- சென்னை எழும்பூர் சிலம்பு விரைவு வண்டி மானாமதுரை- செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே வரும் 26 முதல் 28 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.மைசூர்- தூத்துக்குடி- மைசூர் விரைவு வண்டி மதுரை- தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே வரும் 29,30 தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 March 2021 4:31 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?