பராமரிப்பு பணிகள்- ரயில்கள் ரத்து
திருநெல்வேலி, குருவாயூர் விரைவு ரயில்கள் மதுரை மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களோடு நிறுத்தம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில்,மதுரை, விருதுநகர், துலுக்கப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்காணும் ரயில்கள் பகுதி மற்றும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.02627/8 திருச்சி- திருவனந்தபுரம் சென்ட்ரல்- திருச்சி இன்டர்சிட்டி விரைவு வண்டி மார்ச் 21 முதல் 30 ம் தேதி வரை முழுதுமாக ரத்து செய்யப்படுகிறது.சென்னை எழும்பூர்- நாகர்கோவில்- சென்னை எழும்பூர் விரைவு வண்டி மார்ச் 25,26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர்- குருவாயூர்- சென்னை எழும்பூர் சென்னை- திருநெல்வேலி இடையே மார்ச் 20 முதல் 30 ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அது போல் நாகர்கோவில்- கோயம்புத்தூர்- நாகர்கோவில் விரைவு வண்டி மதுரை நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மார்ச் 20 முதல் 30 ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர் திருநெல்வேலி அதிவேக விரைவு வண்டி மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மார்ச் 26 முதல் 30 ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூர்- செங்கோட்டை- சென்னை எழும்பூர் சிலம்பு விரைவு வண்டி மானாமதுரை- செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே வரும் 26 முதல் 28 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.மைசூர்- தூத்துக்குடி- மைசூர் விரைவு வண்டி மதுரை- தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே வரும் 29,30 தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.