/* */

தூத்துக்குடி ரவுடி கொலை: போலீஸ் ஏட்டு,கூட்டாளி குண்டர் சட்டத்தில்கைது!

தூத்துக்குடியில் பிரபல ரவுடியை சொலை செய்த போலீஸ் ஏட்டு, கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி ரவுடி கொலை: போலீஸ் ஏட்டு,கூட்டாளி குண்டர் சட்டத்தில்கைது!
X

குண்டர் சட்டத்தில் கைதான போலீஸ் ஏட்டு மற்றும் அவரது கூட்டாளி.

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் காட்டுப்பகுதியில் கடந்த 9ம் தேதி இரவு 7 கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட தூத்துக்குடி பாத்திமாநகரைச் சேர்ந்த பேனட் மச்சாது மகன் லூர்து ஜெயசீலன் (41) என்பவர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுபற்றி கிடைத்த தகவலையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு உடனடியாக தனிப்படைகள் அமைத்து கொலை செய்தவர்களை தேடிவந்தனர்.

தனிப்படை போலீசார் சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, அதை அடிப்படையாக வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் கொலையுண்ட லூர்து ஜெயசீலன் கடந்த 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த அழகு என்பவரைக் கொலை செய்துள்ளார். இது சம்மந்தமாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட அழகு என்பவர் மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பொன்மாரியப்பன் (39) என்பவரின் தாய் மாமா ஆவார். ஆகவே தனது மாமா அழகுவை கொலை செய்த லூர்து ஜெயசீலனை 23 ஆண்டுகள் கழித்து பழிக்குப்பழியாக கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு மேற்படி தலைமைக் காவலர் பொன்மாரியப்பன், தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெயராமபாண்டியன் மகன் மோகன்ராஜ் (39) என்பவருடன் சேர்ந்து லூர்து ஜெயசீலனை கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் இவ்வழக்கில் 24 மணி நேரத்தில் துப்பு துலக்கி பொன்மாரியப்பன் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இருவர் மீதும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மற்றும் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் பொன்மாரியப்பன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வேல்முருகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அவரது அறிக்கையின் அடிப்படையில் எஸ்பி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் செந்திராஜ், கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட தலைமைக் காவலர் பொன்மாரியப்பன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தார்.

Updated On: 26 May 2021 3:33 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  2. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  3. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  4. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  5. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  6. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!