100% தடுப்பூசி செலுத்திய கிராமம் கே.தளவாய்புரம் -தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கே.தளவாய்புரம் கிராமம் 100% தடுப்பூசி செலுத்திய கிராமம் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டம் கண்ணங்கட்டை ஊராட்சி சேர்ந்த கே.தளவாய்புரம் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் 100% தடுப்பூசி போட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், கண்ணங்கட்டை ஊராட்சி சேர்ந்த இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தொகை 412 பேர் இவர்கள் அனைவரும் கோவிட்சீல்டு தடுப்பூசியை போட்டுள்ளனர். இந்த கிராமம் பிற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோன தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோன தடுப்பூசி செலுத்தும் இத்திட்டத்தை சிறப்பாக கொண்டு சென்ற தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, கயத்தாறு மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.