குடோனில் பதுக்கிய 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனச்சரகர்கள் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்பொழுது மாப்பிள்ளையூரணிக்கு அருகில் உள்ள காமராஜ்நகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்த போது அங்கிருந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சார்ந்த மணிக்கிரீவன்(29) என்பவரிடம் விசாரணை செய்த போது அங்கு 3 டப்பிக்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த வன உயிரின காப்பக அதிகாரிகள் மணிக்கிரீவனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சார்ந்த மன்சூர்அலி என்பவரை வனச்சரகர்கள் தேடி வருகின்றனர். அவர்கள் மீது வன உயிரின குற்றம் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தின் போது வனவர் அருண்குமார், வனக்காப்பாளர் ரெங்கநாத் ஆகியோர் உடனிருந்தனர்.