/* */

குடோனில் பதுக்கிய 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

குடோனில் பதுக்கிய 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
X

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனச்சரகர்கள் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்பொழுது மாப்பிள்ளையூரணிக்கு அருகில் உள்ள காமராஜ்நகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்த போது அங்கிருந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சார்ந்த மணிக்கிரீவன்(29) என்பவரிடம் விசாரணை செய்த போது அங்கு 3 டப்பிக்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 100 கிலோ கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த வன உயிரின காப்பக அதிகாரிகள் மணிக்கிரீவனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சார்ந்த மன்சூர்அலி என்பவரை வனச்சரகர்கள் தேடி வருகின்றனர். அவர்கள் மீது வன உயிரின குற்றம் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தின் போது வனவர் அருண்குமார், வனக்காப்பாளர் ரெங்கநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 22 April 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...