/* */

திருவாரூர் எம்எல்ஏவிடம் காசநோய் பணியாளர் சங்கம் மனு

திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணனிடம் காசநோய் பணியாளர்கள் சங்கததினர் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வரானார். திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகைதந்த மாவட்ட கழக செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் சட்ட மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் கோவிந்தராஜன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனுக்குபொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு காசநோய் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காசநோய் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 May 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்