/* */

திருவாரூர் பகுதியில் சிறப்பு பூஜைகளுடன் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்

திருவாரூர் பகுதியில் சிறப்பு பூஜைகளுடன் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினர்.

HIGHLIGHTS

திருவாரூர் பகுதியில் சிறப்பு பூஜைகளுடன் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்
X

திருவாரூர் மாவட்ட பகுதியில் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் சிறப்பு பூஜையுடன் தொடங்கினர்.

திகாவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் பிரதான தொழில் விவசாயம். இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி ஆகிய நெல் சாகுபடிகள் சுமார் 20 லட்சம் ஏக்கரில் நடைபெறுவது வழக்கம்.

விவசாயத்திற்கு தேவையான தண்ணீருக்கு விவசாயிகள் மேட்டூர் அணையை பெரிதும் நம்பியுள்ளனர். ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயகள் குறுவை சாகுபடியை தொடங்குவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையை திறந்த வைத்துள்ளார். இது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் முதல்வருக்கு மகிழ்ச்சியை தெரிவித்தது மட்டுமின்றி, ஒரு படி கூடுதலாக சிறப்பு பூஜைகள் செய்து குறுவை விவசாயப் பணிகளை தொடங்கி உள்ளனர்.

திருவாரூர் அருகே பூதமங்கலச்சேரி கிராமத்தில் டிரம் சீடிங் எனப்படும் நேரடி நெல் விதைப்பை விவசாயிகள் இன்று மேற்கொண்டனர்.

இந்தாண்டு விவசாயம் தடையின்றி நடைபெற தமிழ்நாடு முதலமைச்சர் தூர் வாருதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என்றனர்.

டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை விவசாயம் நடைபெற ரூ.65 கோடி மதிப்பில் ஆறுகள் தூரவாரப்பட்டு வருவதும், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை

நேரத்தில் குறைந்த விலையில் வேளாண் பொறியியல் துறை மூலமாக விவசாய பணிக்காக இயந்திரங்கள் வழங்கி வருவதும் விவசாயிகளுக்கு பேருதவியாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக விவசாயிகள் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே விவசாயக் கடன்களை எந்தவித நெருக்கடியின்றி வழங்கிடவும், விதை, உழவு, நடவு மானியங்கள் அடங்கிய குறுவை சிறப்பு தொகுப்பை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், உள் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 12 Jun 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு