பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் கோரிக்கை
பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 வழங்க திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் அதிமுக ஊராட்சி உறுப்பினர் வலியுறுத்தல்
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் மாதம்தோறும் நடைபெறும் மாவட்ட ஊராட்சி கூட்டம் இன்று மாலை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தமிழக வளர்ச்சிக்கு அயராது உழைத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர். தொடர்ந்து அதிமுக 5 வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர் செல்வம் பேசுகையில், தமிழக மக்களுக்கு பொங்கல் தொகுப்பு அறிவித்ததற்க்கு நன்றி தெரிவிப்பதாகவும் , அதனுடன் சேர்த்து பொங்கல் பரிசு தொகையாக ஒரு குடும்ப அட்டைத்தாரருக்கு ரூ.2500 வழங்க வேண்டும் மக்களும் எதிர்பார்க்கிறார்கள் . அதனை மாவட்ட ஊராட்சி தலைவர் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுகொள்வதாக தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட ஊராட்சி அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.