திருவாரூர் திருநெய்ப்பூர் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
திருவாரூர் அருகே திருநெய்ப்பூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றார்.
HIGHLIGHTS
திருவாரூர் திருநெய்ப்பேர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர்.ப.காயத்ரி கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்.பூண்டி.கே.கலைவாணன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மாநில, மத்திய அரசின் மூலம் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். கிராமசபா கூட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்தும், தேவையான திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அரசுக்கு திட்ட அறிக்கையாக அனுப்பப்படுகிறது.
மேலும் இன்றைய தினம் நிலவும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசு கூறும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தும் கொரோனா நோய் எதிர்ப்பு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.குடியிருப்பு பகுதிகளை சுற்றி குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். சுத்தமான குடிநீரை பயன்படுத்தியும் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்.பாலச்சந்திரன், துணைஆட்சியர் பயிற்சி.தனலெட்சுமி, உதவி இயக்குநர் ஊராட்சிகள்.பழனிசாமி ஒன்றிய குழுத்தலைவர்.தேவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.