இலவச குடிமனையை அபகரித்த திமுக ஊராட்சி தலைவர்: மீட்டு தர மாவட்ட ஆட்சியரிடம் மனு
அரசு அளித்த இலவச குடிமனையை அபகரித்த திமுக ஊராட்சி மன்ற தலைவரிடமிருந்து மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் இரு பெண்கள் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்காவுக்குட்பட்ட எருகாட்டூர் கிராமத்தில் திமுக-வை சேர்ந்த ராஜா, ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் அந்த ஊராட்சிகுட்பட்ட மேல எருக்காட்டூர் பகுதியை சேர்ந்த ராணி, விஜயலெட்சுமி, துரை ராஜ் ஆகிய மூவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு இலவச குடிமனை பட்டா வழங்கியது.
ஆனால் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள ராஜா என்பவரும், அவரது மைத்துனர் அசோகன் என்பவரும் இணைந்து அரசு தங்களுக்கு வழங்கிய குடிமனையை அபகரித்து கொண்டு வீடு கட்டி வருவதாகவும், அதனை தடுத்த எங்களை வயதான பெண்கள் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தனர். இது குறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை என்பதால் தங்களுக்கு அரசு வழங்கிய தங்களது பெயரில் பட்டா உள்ள குடிமனையை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தனர்.