/* */

இலவச குடிமனையை அபகரித்த திமுக ஊராட்சி தலைவர்: மீட்டு தர மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு அளித்த இலவச குடிமனையை அபகரித்த திமுக ஊராட்சி மன்ற தலைவரிடமிருந்து மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் இரு பெண்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

இலவச குடிமனையை அபகரித்த திமுக ஊராட்சி தலைவர்:  மீட்டு தர மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

அபகரித்த குடிமனையை மீட்டு தரக்கோரி மனு அளித்த ராணி மற்றும் விஜயலக்ஷ்மி 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்காவுக்குட்பட்ட எருகாட்டூர் கிராமத்தில் திமுக-வை சேர்ந்த ராஜா, ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் அந்த ஊராட்சிகுட்பட்ட மேல எருக்காட்டூர் பகுதியை சேர்ந்த ராணி, விஜயலெட்சுமி, துரை ராஜ் ஆகிய மூவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு இலவச குடிமனை பட்டா வழங்கியது.

ஆனால் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள ராஜா என்பவரும், அவரது மைத்துனர் அசோகன் என்பவரும் இணைந்து அரசு தங்களுக்கு வழங்கிய குடிமனையை அபகரித்து கொண்டு வீடு கட்டி வருவதாகவும், அதனை தடுத்த எங்களை வயதான பெண்கள் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தனர். இது குறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித பயனும் இல்லை என்பதால் தங்களுக்கு அரசு வழங்கிய தங்களது பெயரில் பட்டா உள்ள குடிமனையை மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தனர்.

Updated On: 19 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...