/* */

திருவாரூரில் விவசாயிகள் நலனிற்காக வேளாண் காடு வளர்ப்பு திட்டம் துவக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலனிற்காக வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூரில் விவசாயிகள் நலனிற்காக வேளாண் காடு வளர்ப்பு திட்டம் துவக்கம்
X

திருவாரூரில் நடந்த வேளாண் காடு வளர்ப்பு திட்ட தொடக்க விழாவில் ஒரு விவசாயிக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செம்மையான முறையில் செயல்படுத்தி வருகிறது.தமிழ்நாட்டில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையிலும் விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழலை உருவாக்குவதற்கும் "தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை காண இயக்கம்" என்ற புதிய வேளாண்காடு வளர்ப்புத் திட்டம் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக நலத் துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாய நிலங்களின் வரப்புகளிலும், விவசாய நிலங்களிலும் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இருவரும் இணைந்து விவசாயிகளுக்கு தேக்கு, மகாகனி, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை வழங்கினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வேளாண்பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் இணைந்து பார்வையிட்டனர்

Updated On: 30 Nov 2021 1:35 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  3. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  4. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  8. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  9. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை