தனித்திறன் சிலம்ப போட்டிகளில் கூடலூர் மாணவர்கள் வெற்றி
Silambam in Tamil -சுதந்திர தின தனித்திறன் சிலம்ப விளையாட்டு போட்டிகளில் கூடலுார் மாஸ்டர் குருசாமியின் மாணவர்கள் வெற்றிகளை குவித்தனர்.
HIGHLIGHTS
Silambam in Tamil -75 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு, கோம்பை ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய ஆடவர் மற்றும் மகளிருக்கான மாநில அளவிலான தனித்திறன் சிலம்பவிளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கூடலூர் சிலம்ப மாஸ்டர் த.குருசாமி, ரா.செந்தில்ராம்குமார் ஆகியோரது மாணவர்கள் வெற்றிகளை குவித்தனர். இந்த போட்டிகளில் கூடலுார் மாணவர்கள் கிருஷ்ண தேவராயலு, அலினா, அலிஷா, ஜுவசரூன், சமன்யூதர்ஷன், வருனேஷ், சுஜித்கண்ணன், மதிமித்ரன், பைரவர், தேவேஷ்,கிஷோர், ஹரிஹரன், கோகுல்ராம், ராஜபிரியன் ஆகிய பதினான்கு மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர். விழாக் குழுத்தலைவர் மன்னவன் வெற்றி பெற்ற குருசாமி மாஸ்டர் அணிக்கு முதல் பரிசுக்கான சுழல் கோப்பையை வழங்கினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2