/* */

தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

தஞ்சை மாநகராட்சியில் இன்று 4 மையங்களில், 560 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்று, மாநகராட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X

மாதிரி படம்

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடப்பட்டுகிறது.

அவ்வகையில் இன்று 4 மையங்களில் 560 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

தஞ்சை, பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 90 நபர்களுக்குக்கும், அண்ணாநகர் பள்ளியில் 100 நபர்களுக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும், லட்சுமி நாராயணன் பள்ளியில் 100 நபர்களுக்கும் என மூன்று மையங்களில் 390 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், கரந்தை மாநகராட்சி பள்ளியில் 170 நபர்களுக்கு கோவாக்ஷீன் தடுப்பூசியும் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Sep 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...