டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்: இன்று இரவுக்குள் சென்னைக்கு எடுத்து செல்லப்படும்
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 79 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 323 பேர் ஒருங்கிணைந்த புள்ளியியல் துறை தேர்வு நடந்தது
HIGHLIGHTS
தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் இன்று இரவுக்குள் அல்லது நாளை அதிகாலைகுள் சென்னை கொண்டு வரப்படும். ஜிபிஎஸ், கேமிரா கொண்டு பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும். இதில் எதாவது சேதங்கள் இருந்தால் உரிய விசாரணை செய்த பிறகே மதிப்பீடு செய்யயப்படும் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தகவல்.
தஞ்சையில் நடைபெற்று வரும் புள்ளியில் துறைக்கான காலி பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் தேர்வினை டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 79 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 323 பேர் ஒருங்கிணைந்த புள்ளியியல் துறை காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடைபெற்று வருகிறது. காலை மாலை என இரு பிரிவுகளாக தேர்வுகள் மாணவர்கள் நலன் கருதி நடத்தப்பட்டு வருகிறது.
இன்று இரவோ அல்லது நாளை அதிகாலையோ அனைத்து விடைத்தாள்களும் சென்னை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடை தாள்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் எடுத்துச் செல்லும் போதும், ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்ட வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும். தேர்வு எழுத வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை அதிக அளவு இருக்குமேயானால் அந்த மாணவர்கள் தனி அறையில் வைத்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே திட்டமிட்ட தேர்வு என்பதால் பழைய முறைப்படி தான் தேர்வு நடைபெற்று வருவதாவும் அவர் தெரிவித்தார்.