இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு
தஞ்சை அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
தஞ்சை அருகே சிந்தாமணி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தாயுமானவன் (36). இவரது மனைவி தேன்மொழி (26). தாயுமானவன் தஞ்சை அருகே தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் தாயுமானவன் மற்றும் தேன்மொழி இருவரும் பைக்கில் வலங்கைமானுக்கு, உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
பின்னர் அங்கிருந்து ஊருக்கு திருவையாறு வழியாக திரும்பி வந்தனர். தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி பைபாஸில் வந்த போது, 8-கரம்பை அருகே, பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் தாயுமானவன், தேன்மொழி இருவரும் படுகாயமடைந்தனர். உடன் அக்கம்பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாயுமானவன் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.