தஞ்சை பெரியகோயில் சித்திரை தேரோட்டம்
தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோவில் பிரகாரத்திற்குள் எளிமையாக நடந்தது.
HIGHLIGHTS
உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா கடந்த 9ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று வந்தன.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய தொல்லியல் துறை பராமரிப்பின் கீழ் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி புராதான சின்னமான தஞ்சை பெரியக் கோவில் மூடப்பட்டது.
இதனால் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தேரோட்டம் நாளான இன்று பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோவில் பிரகாரத்திற்குள் எளிமையாக சுவாமி பிரகார உலா நடைபெற்றது.
அஸ்திரதேவர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேதமாக சுப்ரமணியர், கமலாம்பாள் சமேதமாக தியாகராஜர். நீலோத்பாலாம்பாள் ஆகிய சுவாமிகள் தனி தனி சப்பரத்தில் எழுந்தருள மங்கள வாத்யங்கள் இசைக்க, ஒதுவார்கள் திருமுறை பாட, சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஒத பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோவில் பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள எளிமையாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.