Begin typing your search above and press return to search.
பெரு நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
பங்குனி மாதத்தின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு ஒன்பது வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலில் மாதம் இருமுறை வரும் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும்.பங்குனி மாதத்தின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஏற்ற பெரு நந்திக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், திரவிய பொடி, அரிசி மாவு பொடி, இளநீர், எலுமிச்சைச் சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தியம்பெருமானுக்கு, மகா தீபாராதனை காட்டப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.