/* */

தஞ்சாவூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 650 காளைகள் 350 வீரர்கள் பங்கேற்பு

தஞ்சை அருகே ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாசியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

தஞ்சாவூர்  அருகே  ஜல்லிக்கட்டு போட்டி: 650 காளைகள் 350  வீரர்கள் பங்கேற்பு
X

தஞ்சாவூர் அருகே ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

தஞ்சாவூர் ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றது. இதில் 650 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை அருகே ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றறது. இந்த போட்டியை கோட்டாசியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக போட்டியில் பங்கேற்ற வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர். வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி தஞ்சை ராமநாதபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Updated On: 26 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  2. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  5. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  6. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  8. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  10. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...