/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை இல்லாத போது, இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, கும்பகோணம், திருவையாறு, பாபநாசம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். மேலும் மழையின் காரணமாக பூதலூரை சேர்ந்த 5 வயது சிறுவனும், பேராவூரணி சேர்ந்த மூதாட்டியும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழுந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்