Begin typing your search above and press return to search.
தொடர் மழை : தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு, கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மழை காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.