/* */

பேராவூரணி அருகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு பரிசு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு ஊராட்சி தலைவர் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

HIGHLIGHTS

பேராவூரணி அருகே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு பரிசு
X

பேராவூரணி அருகே பெரியநாயகிபுரம் பஞ்சாயத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களுக்கு சில்வர் தட்டு பரிசாக வழங்கப்பட்டது.

படுக்கோட்டை, பேராவூரணி வட்டாரங்களில், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிகளவில் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைக்கும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரமும், இரண்டாவது பரிசாக 3 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், பாராட்டு சான்றிதழுடன், கெளவுரவிக்கப்படும் என பட்டுக்கோட்டை சப்–கலெக்டர் பாலச்சந்தர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் பொதுமக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு அளித்ததால், பொதுமக்கள் ஏராளமான நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

பேராவூரணி யூனியன் பெரியநாயகிபுரம் பஞ்சாயத்தில், மூன்று இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில், 450க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன், பஞ்.,தலைவர் முத்துராமன் ஏற்பாட்டில் சில்வர் தட்டு போன்றவை பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டது.

அத்துடன் முதல் டோஸ் செலுத்திக் கொள்ள முன்வந்தவர்களின் பெயரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஊக்கத் தொகையாக முதல் பரிசு 1,500, இரண்டாம் பரிசு 1,000, மூன்றாம் பரிசு 500 என மூவருக்கு வழங்கப்பட்டது.

Updated On: 12 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்