தஞ்சை மாவட்டத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 23 பேர் பாதிப்பு. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை.
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரக் கூடிய நிலையில், தஞ்சை மாவட்டத்தில் 44 ஆயிரத்து 934 பேர் பாதிக்கப்பட்டு 36 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 502 பேர் உயிரிழந்த நிலையில் நாளுக்கு நாள் உயிர் இழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 7,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக நேற்றைய தினம் 841 பேர் தோற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் புதிதாக கண்டறியப்பட்ட கருப்பு பூஞ்சை தொற்று தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இருவரும் தஞ்சை தனியார் மருத்துவமனையில் 3 பேருக்கும் என ஐந்து பேர் கருப்பு பூஞ்சை நோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை மேலும் பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 19 பேரும் தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 23 பேர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருவது தஞ்சாவூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.