/* */

மேகதாதுவில் அணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: 9 மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம்

மேகதாதுவில் அணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மேகதாதுவில் அணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: 9  மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம்
X

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் சார்பில் கண்டனங்கள் எழுந்துள்ளது. மேலும் பல்வேறு விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தஞ்சை தபால் நிலையம் முன்பு கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக அரசுக்கும் எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, கர்நாடக அரசு அணை கட்ட நிதி ஒதுக்கியது என்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டும். இல்லை என்றால் தமிழக அளவவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 17 March 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்