/* */

கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கல்லணை கால்வாயில் ரூ.2639.15 கோடியில் புனரமைப்பு திட்ட பணிகள் தீவிரம்
X

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து கல்லணை கால்வாய் என்ற பெயரில், ஆங்கிலேயார்கள் ஆட்சி காலத்தில் 1928-ம் ஆண்டு, வானம் பார்த்த பூமியாக காணப்பட்ட பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதியின் மூலம் பாசன வசதியை உருவாக்க, 148 கி.மீ. தூரத்துக்கு முதன்மை வழிதடத்ததையும்,

636 கி.மீ.தூரத்துக்கு கிளை வாய்க்கால்களையும் வெட்டினர். அத்துடன் 694 நீர்பிடிப்பு ஏரிகள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 2.27 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

கல்லணை கால்வாயில் இருந்து பாசனத்துக்காக ஆரம்பத்தில், வினாடிக்கு 4,200 கன.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு கரைகள் பலவீனமானதால் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தாலே கரைகளில் உடைப்பு ஏற்படுவது வழக்கமாகிவிடுகிறது. இதனால் கடைமடைக்கு ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் பல ஆண்டுகளாக கல்லணை கால்வாயை முறையாக புனரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், கல்லணை கால்வாயை 16 தொகுப்புகளாக புனரமைப்பு செய்ய, ரூ.2639.15 கோடி ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்த தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பணியை கடந்த பிப்.14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் துவக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து பணிகள் துவங்கப்பட்ட கல்லணை கால்வாயில் சிமென்ட் தளம் அமைப்பது, கரையை பலப்படுத்தல் போன்ற பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கல்லணைக் கால்வாய் உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் கூறுகையில் 16 தொகுப்புகளாக பணிகள் பிரிக்கப்பட்டு, ரூ.2639.15 கோடியில் 100 கி.மீ தூரத்துக்கு கல்லணை கால்வாய் கான்கீர்ட் லைனிங் அமைக்கும் பணி,

1,339 மதகுகள் திரும்ப கட்டும் பணி, 21 கால்வாய் நீர்வழி பாலம் திரும்ப கட்டு பணி, 12 கால்வாய் நீர் வழி பாலம் சீரமைக்கும் பணி, 24 நீரொழுங்கிகள் திரும்ப கட்டும் பணி, ஒரு நீரொழுங்கி புதியதாக கட்டும் பணி,

20 பாலங்கள் புதியதாகவும், 10 பாலங்கள் சீரமைக்கும் பணி, 308 ஏரிகள் புனரமைக்கும் பணி என நடைபெற உள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி எந்த தடையும் இன்றி பெற முடியும்.

இத்திட்ட பணகள் மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடைமடைக்கு தண்ணீர் செல்ல இரு வார காலம் பிடிக்கும்,

இப்பணிகள் நிறைவு பெற்றதும், ஒரு வார காலத்தில் கடைமடைக்கு தண்ணீர் செல்லும். தண்ணீர் பூமிக்குள் இறங்கும் வகையில் ஆங்காங்கே கசிவு நீர் குழிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 22 April 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  2. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  5. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  6. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  7. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  10. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...