/* */

சுரண்டையில் கந்துவட்டி வசூலித்த மூன்று பேர் கைது: போலீசார் அதிரடி

சுரண்டையில் கந்துவட்டி வசூலித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சுரண்டையில் கந்துவட்டி வசூலித்த மூன்று பேர் கைது: போலீசார் அதிரடி
X

சுரண்டை கந்துவட்டி புகாரின்பேரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பொட்டல் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாசலநாடார் மகன் கண்ணன் (47). இவர் கோழி வியாபாரம் செய்து வருகிறார். இவர் வியாபார விருத்திக்காக ஆலங்குளத்தை சேர்ந்த குமார் மகன் கனகராஜ்(67) மற்றும் பிரேம்குமார் (25), பெலிக்ஸ் ராஜா (46) ஆகியோருடன் உரிய ஆவணங்களை வழங்கி கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு மாதம் மாதம் வட்டி செலுத்தி வந்துள்ளார். இதில் அரசு நிர்ணயித்துள்ள வட்டியை விட அதிக வட்டி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த கண்ணன் சுரண்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கந்து வட்டி வசூலித்ததாக ஆலங்குளத்தை சேர்ந்த கனகராஜ், பிரேம் குமார், பெலிக்ஸ் குமார் ஆகியோரை கைது செய்தார்.

Updated On: 2 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு