சுரண்டையில் கந்துவட்டி வசூலித்த மூன்று பேர் கைது: போலீசார் அதிரடி
சுரண்டையில் கந்துவட்டி வசூலித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
சுரண்டை கந்துவட்டி புகாரின்பேரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பொட்டல் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாசலநாடார் மகன் கண்ணன் (47). இவர் கோழி வியாபாரம் செய்து வருகிறார். இவர் வியாபார விருத்திக்காக ஆலங்குளத்தை சேர்ந்த குமார் மகன் கனகராஜ்(67) மற்றும் பிரேம்குமார் (25), பெலிக்ஸ் ராஜா (46) ஆகியோருடன் உரிய ஆவணங்களை வழங்கி கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு மாதம் மாதம் வட்டி செலுத்தி வந்துள்ளார். இதில் அரசு நிர்ணயித்துள்ள வட்டியை விட அதிக வட்டி வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த கண்ணன் சுரண்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கந்து வட்டி வசூலித்ததாக ஆலங்குளத்தை சேர்ந்த கனகராஜ், பிரேம் குமார், பெலிக்ஸ் குமார் ஆகியோரை கைது செய்தார்.