கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
![கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்](https://www.nativenews.in/h-upload/2024/05/18/1904921-0f35d21f-0748-4fd7-98a4-136c028e7003.webp)
வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற சான்றிதழ் வழங்குதல் குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டம் ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள் கொடுக்கும் மனுவினை உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மாணவர்கள் உயர்கல்விக்கு சேர்வதால் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அதுபோல விவசாயிகளுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியர் ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராஜராஜேஸ்வரி மற்றும் அரசு ஊழியர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம் பகுதியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மீண்டும் கணக்கெடுப்பு பணி தீவிரம்
கலசப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை மீண்டும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்
கடந்த ஆண்டில் மொத்தம் 3346 வீடுகள் பட்டியலில் இருந்தது. பிரதம மந்திரி வீடு திட்டத்தில் சுமார் 1382 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 696 பயனாளர்களுக்கு பெயர் பதிவிடப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் என்றால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் அவர்களுக்கு கட்டாயம் வீடு வழங்க வேண்டும்.
குடிசை வீடு ,ஓட்டு வீடு, சீட்டு வீடு ,தட்டை வீடு என்றாலும் தாராளமாக பெயர் பதிவு செய்து அவர்களுக்கு வீடு வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது . அதன் அடிப்படையில் தற்போது கலசப்பாக்கம் ஊராட்சியில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்டுள்ள பயனாளிகளின் கணக்கெடுக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.