தென்காசி மாவட்ட காவல்துறையினர் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பாக இ.சி.ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட காவல்துறையின் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை.
நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி நம் நாட்டின் 73 ஆவது குடியரசு தினவிழா தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி தென்காசி இ.சி. ஈஸ்வரன்பிள்ளை பள்ளி மைதானத்தில் நாளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பாக இ.சி.ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், வனத்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் NCC மாணவர்களின் ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றது.
மேலும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர வெடிகுண்டு சோதனை மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.