Begin typing your search above and press return to search.
கீழப்பாவூர் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை: பக்தர்கள் பங்கேற்பு
கீழப்பாவூர் விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள விநாயகர் கோவிலில் வருகிற 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 10 நாட்கள் தினம் தோறும் வெவ்வேறு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முதல் நாள் பாதாம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு அலங்காரம், தீபாராதனை பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு சாய்ரக்ஷை, தீபாராதனை 7 மணிக்கு விசேஷ அலங்காரம், 1008 அர்ச்சனை, இரவு 8 மணிக்கு தீபாரனை நடைபெறுகின்றன. வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப ஜபம், விசேஷ அபிஷேகம், அலங்காரம், நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது.