சுரண்டை பள்ளியில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
சுரண்டை பள்ளியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில், 73 வது குடியரசு தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மற்றும் புதுச்சுரண்டை சேகர தலைவர் டிகே ஸ்டிபன் தலைமை வகித்தார். திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் அன்னப்பிரகாசம், ராஜ்குமார், சேகர செயலாளர் ஜேம்ஸ், பொருளாளர் ஸ்டீபன் ஜெபராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா பாய் ஜொயராணி வரவேற்று பேசினார்,
மாவட்ட காங்கிரஸ் செயலாளரும், காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவருமாகிய ஏகேஎஸ் சேர்மசெல்வம், தேசிய கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி, சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் டுவின்ஸ் முருகேசன், கோபால், சுக்கிரன் (எ) சுப்பிரமணியன், டெய்லர் முருகன், மற்றும் சபை ஊழியர்கள் ஜான், அருள்ராஜ், சேகர மன்ற உறுப்பினர்கள் ஜேக்கப், தினகரன், பால்ராஜ், உதவி ஆசிரியர்கள் சாந்தினி, அகிலா, சித்ரா, சாந்தகுமாரி, அன்னமரியா, அன்பு, பிரபா, மதி, ஜான்சி மற்றும் ரூஸ்வெல்ட், கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.