/* */

தென்காசியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 200-க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தென்காசியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 200-க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய மூன்று தாலுகாக்களில் இருந்து 200 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசு வழங்கும் உதவித்தொகை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே வீட்டு மனை பட்டா இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க கோரியும், கணவனை இழந்த விதவைகளுக்கு விதவை உதவித்தொகை போன்றவற்றை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 30 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.