/* */

தபால் வாக்குப்பதிவு- ஆர்வமுடன் வாக்களித்த போலீசார்

தபால் வாக்குப்பதிவு- ஆர்வமுடன் வாக்களித்த போலீசார்
X

தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினருக்காக நடைபெற்ற தபால் வாக்கு முகாமில் போலீசார் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குபதிவு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், ஊர்காவல் படையினருக்கான தபால் வாக்கு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இதில் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1359 போலீசார் மற்றும் 165 ஊர் காவல் படையினர் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கான தபால் வாக்குபதிவு ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் போலீசார் மாஸ்க் அணிந்து உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் ஆர்வமுடன் வரிசையில் நின்று பாதுகாப்பான முறையில் வாக்கு அளித்து சென்றனர்.

Updated On: 31 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.