Begin typing your search above and press return to search.
குற்றாலத்தில் எம்எல்ஏ தலைமையில் கவிதை நூல் வெளியீட்டு விழா
குற்றாலத்தில் காமராஜருக்கு நதிகளில் தவழ்ந்த கவிதைகள் நூல் வெளியீட்டு விழா பழனிநாடார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
குற்றாலத்தில் நதிகள் அறக்கட்டளையின் சார்பில் காமராஜருக்கு நதிகளில் தவழ்ந்த கவிதைகள் என்ற நூலை பழனி நாடார் எம்.எல்.ஏ. வெளியிட்டார். குற்றாலம் ராமாலயம் தெஷண மாற நாடார் சங்க அரங்கில் நடந்த விழாவிற்கு, பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்து நூலை வெளியிட சிவன் பார்வதி இராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். நதிகள் அறக்கட்டளை நிறுவனர் ராமராஜ் ஜெயலட்சுமி வரவேற்றார். மஹ்மூதா செய்யது தொகுத்து வழங்கினார். தொழிலதிபர் காளிதாசன், விவேகானந்தன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன், பிரபாகரன், தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்ரா நன்றி கூறினார்.