தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்டஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ்., தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி, பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனிநபர் கடன் உதவித்தொகை, தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 467 மனுக்கள் பெறப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்து மாதவன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) சேக் அப்துல் காதர், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) பிரான்சிஸ், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பொது மகக்ள் பலர் கலந்து கொண்டனர்.