குற்றாலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
வருகிற 2026- தேர்தலில் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை, தமிழகமுதலமைச்சர் ஆக்க பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது
HIGHLIGHTS
குற்றாலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார் ஆலோசனைக். மாவட்ட தலைவர் குலாம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மருத்துவர். அய்யா, இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி ஆகியோரின் ஆலோசனைப்படி, கிராமங்கள் தோறும் மக்களை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியை பலப்படுத்துவது, வருகிற நகர்புற தேர்தலில் அதிக வார்டுகளில் போட்டியிடுவது, மாதம் தோறும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஒன்றிய அளவில் ஊழியர்கள் கூட்டம் நடத்துவது, வருகிற 2026- தேர்தலில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசை, தமிிழகமுதலமைச்சர் ஆக்க தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், தென்காசி நகர செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் மகாராஜன், பெரியசாமி, கருப்பசாமி , தென்காசி ஒன்றிய தலைவர் தண்டபாணி, சுந்தரபாண்டிய புரம் நகர தலைவர் ராமமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.