/* */

குற்றாலம் தங்கும் விடுதியில் ஒருவர் கொலை: காவல்துறையினர் விசாரணை

குற்றாலத்தில் தங்கும் விடுதி ஒன்றில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குற்றாலம் தங்கும் விடுதியில் ஒருவர் கொலை: காவல்துறையினர் விசாரணை
X

கொலை நடைபெற்ற தனியார் தங்கும் விடுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ் (36). இவர் சென்னை சிட்ல பக்கத்தில் மூலிகை மருந்து வியாபாரம் செய்து வந்தார்.

இவரும் இவரது உறவினரான நாராயணகுமார் என்பவரும் நெல்லை தாழையூத்தை சேர்ந்த தங்கதுரை மற்றும் செல்வம் ஆகிய நான்கு பேரும் குற்றாலத்திற்கு குளிக்க வந்துள்ளனர்.

அங்கு மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இவர்கள் தங்கி இருந்தனர். நேற்று பிற்பகல் நாராயணகுமார் மற்றும் தங்கதுரை ஆகியோர் புரோட்டா வாங்கி வருவதற்காக சென்றுள்ளனர் . அப்போது அறையில் இருந்த முருகேசனை செல்வம் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து செல்வம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். உணவு வாங்கிக் கொண்டு வந்த இருவரும் நீண்ட நேரமாகியும் செல்வம் வராததால் சந்தேகமடைந்து அறைக்குள் சென்று பார்த்தபோது, முருகேசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக குற்றாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் நாராயணகுமார் மற்றும் தங்கதுரை ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

குற்றாலத்தில் சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பரபரப்பான சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 July 2023 4:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...