Begin typing your search above and press return to search.
சுந்தரபாண்டியபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியை சுரண்டை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியை சுரண்டை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தென்காசி தொகுதி செயலாளர் வின்சென்ட் ராஜ் தலைமை தாங்கினார். அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தங்கள் கிராமப்புற பகுதியை நகராட்சியுடன் இணைக்கும்போது அனைத்து வகையான வரிகளும் அதிக அளவில் உயரும். அரசின் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே எங்கள் பகுதியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.