/* */

இலஞ்சியில் திருவிலஞ்சிகுமாரர் கோவில் கும்பாபிஷேகம்.

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் பழமை வாய்ந்த குமாரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

இலஞ்சியில் திருவிலஞ்சிகுமாரர் கோவில் கும்பாபிஷேகம்.
X

திருவிலஞ்சிகுமாரர் கோவில் கும்பாபிஷேகம்

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அகஸ்தியர் வழிபட்ட திருவிலஞ்சி குமரன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு 16-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து 17-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ஆறாம் கால பூஜை, நாமசந்தானம், ஸ்பர்சாகுதி, காலை 7.15 மணிக்கு பரிவார யாகசாலையில் பூர்ணாஹூதி, தீபாராதனை, உடன் கலசங்கள் புறப்பாடு, காலை 10.15 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத திருவிலஞ்சி குமாரசுவாமி திருக்கோவில் விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 21 March 2022 9:31 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்