குற்றாலத்தில் அரசு மருத்துவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
குற்றாலத்தில் தென்காசி மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த மாநில அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் தலைமையில் தென்காசி மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வந்தவர்களை செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் தென்காசி மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க பொருளாளர் ராஜேஷ் கண்ணன் வரவேற்றார்.கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை தலைமை மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலை வகித்தார்.
அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு அரசாங்கம் பாதுகாப்பினை உறுதி செய்ய தீர்மானம் நிறைவேற்றப் பெற்றது. அரசு சேம நல நிதி திட்டத்தில் அரசு மருத்துவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விரைவில் அரசினால் பணி நிரந்தரம் செய்யப்படாத அரசில் வேலை பார்க்கும் மருத்துவர்களுக்கு விரைவில் பணி நிரந்தர ஆணை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் மற்றும் தென்காசி மாவட்ட அரசு மருத்துவர் சங்க பொருளாளர் ராஜேஷ் கண்ணன் செய்திருந்தார்.