தென்காசி மாவட்ட மக்களே உஷார்: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
தென்காசி மாவட்டத்தில் மழை தொடரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இதுதொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவி நயினார் நீர்த்தேக்கங்களில் உபரிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பொதுமக்கள் நீர்நிலைகள், அணைகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் குளிக்கவோ, இறங்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம். கரையோர பகுதிகளில் குடியிருக்கும் மகக்ள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை, வெள்ள இடர்பாடுகள் தொடர்பான உதவிகளுக்கு, 24 மணி நேரமும் இயங்கிவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறையினை, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633-290548ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.