தென்காசியில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,803 பேர் மீது வழக்குப்பதிவு
தென்காசியில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,803 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS
இன்றைய உலகத்தில் போக்குவரத்து என்பது ஒவ்வொரு நபருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக உள்ளது. ஆனால் அதேவேளையில் சாலை விபத்துக்களால் லட்சக்கணக்கான மக்கள் காயமடைதல், ஊனமடைதல் மற்றும் அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்கவே சாலை விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் விபத்தை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுரையின்படி பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 06 நபர்கள் கைது, 2898 ரூபாய் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து 400 ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 117 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 1268 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 300 ரூபாய் மதிப்பிலான லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தை அதிவேகமாக இயக்கியதாக 4 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 230 பேர், தொலைபேசியில் பேசி கொண்டே வாகனம் இயக்கிய 44 பேர், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற 152 பேர், இருக்கை பெல்ட்டுகள் அணியாமல் வாகனம் ஓட்டிய 370 பேர் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 3803 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.