/* */

தென்காசியில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,803 பேர் மீது வழக்குப்பதிவு

தென்காசியில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,803 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசியில்  ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,803 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

இன்றைய உலகத்தில் போக்குவரத்து என்பது ஒவ்வொரு நபருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக உள்ளது. ஆனால் அதேவேளையில் சாலை விபத்துக்களால் லட்சக்கணக்கான மக்கள் காயமடைதல், ஊனமடைதல் மற்றும் அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்கவே சாலை விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் விபத்தை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுரையின்படி பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 06 நபர்கள் கைது, 2898 ரூபாய் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து 400 ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 117 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 1268 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 300 ரூபாய் மதிப்பிலான லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தை அதிவேகமாக இயக்கியதாக 4 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 230 பேர், தொலைபேசியில் பேசி கொண்டே வாகனம் இயக்கிய 44 பேர், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற 152 பேர், இருக்கை பெல்ட்டுகள் அணியாமல் வாகனம் ஓட்டிய 370 பேர் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 3803 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 18 Jan 2022 3:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...