இளம் அறிவியல் ஆர்வலர் கண்காட்சி
தென்காசி அருகே இளம் அறிவியல் ஆர்வலருக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் இலஞ்சி ராமசுவாமி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான இளம் அறிவியல் ஆர்வலர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலர் கோகிலா கண்காட்சியை திறந்து வைத்தார்.
இக்கண்காட்சியில் 50 பள்ளிகளில் இருந்து 120 படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். பசுமை வீடு அமைத்தல், பண்டைய பாரம்பரிய வீட்டு உபயோக பொருட்கள், சூரிய குடும்பத்தின் கோள்கள் பற்றிய சிறப்புகள், மண்புழு தயாரித்தல், கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு என பல படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு இளம் அறிவியல் ஆர்வலர் விருது - 2021 வழங்கப்பட்டது.