Begin typing your search above and press return to search.
திமுக வழக்கறிஞர்கள் கள அலுவலகம் திறப்பு
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா விசாரணை ஆணையம் முழுவீச்சில் இயங்கும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறினார்.
தென்காசியில் இன்று திமுக வழக்கறிஞர்கள் மாவட்ட கள அலுவலகத்தை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது, ஜெயலலிதா மறையவில்லை அவர் சாகடிக்கப்பட்டார். இதற்கான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ 4 ஆண்டுகள் ஆகிறது. 7,8 முறை சம்மன் அனுப்பியும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை.இன்னும் 150 நாட்களில் மு.க ஸ்டாலின் முதல்வராக வந்த உடன் அந்த ஆணையம் முழு வேகத்தோடு விசாரணை துவங்கி யார் காரணகர்த்தாவோ அவர்களை மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தோலுரித்து காட்ட திமுக சட்டத்துறை அரசுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.