கல்லல் அருகே செம்மண் கிராவல் குவாரி அமைக்க அனுமதி: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கல்லல் அருகே செம்மண் கிராவல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம் கல்லலை அடுத்த அரண்மனை சிறுவயல் அருகே உள்ளது மாலைகண்டான் கிராமம். இந்த கிராமம் வானம் பார்த்த பூமி. இக்கிராமத்தினர் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீரை வரத்து கால்வாய் மூலம் கண்மாயில் சேமித்து விவசாயம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இக்கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு செம்மண் குவாரி அமைக்க கடந்த 2017ம் ஆண்டு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.. இதனை எதிர்த்து கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் மண் குவாரி அமைப்பது தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று அரசு அனுமதி வழங்கியதாக கூறி ஒரு தரப்பினர் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மணலை அள்ளி சென்றதை அறிந்த கிராமத்தினர் இன்று மண் அள்ளும் ஜேசிபி இயந்திரம் முன்பு முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.