/* */

காற்றில் விழுந்த மின்கம்பம்: லஞ்சம் கேட்டு அலைக்கழிப்பதாக புகார்

சிவகங்கையில், காற்றில் விழுந்த மின் கம்பத்தை சரிசெய்ய லஞ்சம் கேட்டு 10 நாட்களாக அலைக்கழிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

காற்றில் விழுந்த மின்கம்பம்:  லஞ்சம் கேட்டு அலைக்கழிப்பதாக புகார்
X

ஒக்கூரை அடுத்துள்ள ஓ.அண்ணநகர் கிராமத்தில் விழுந்து முறிந்த விவசாய மின் இணைப்புக்கான கம்பம். 

சிவகங்கை மாவட்டம், ஒக்கூரை அடுத்துள்ள ஓ.அண்ணநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துராமன். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்துவருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக பெய்த காற்றுடன் கூடிய கனமழையால், இவரது விவசாய நிலத்தில் மிக மோசமான நிலையில் காணப்பட்ட இரு மின்கம்பங்களில் ஒன்று முறிந்து உடைந்து விழுந்துள்ளது.

இது குறித்து, மதகுபட்டி மின்சார வாரிய சார்பு நிலையத்திற்கு, முத்துராமன் தகவல் தெரிவித்ததுடன், சேதமான மின் கம்பங்களை மாற்றி தரக்கோரியும் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் மின் இணைப்பை உடனடியாக துண்டித்த ஊழியர்கள் , கடந்த பத்து நாட்களாக மின் கம்பங்களை மாற்றி தராமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுபற்றி விவரம் கேட்ட விவசாயியிடம், மின்கம்பத்தை மாற்ற அதிகாரிக்கு 4 ஆயிரம் ரூபாய் உட்பட மொத்த 10 ஆயிரம் ரூபாய் செலவாகும் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படும் உரையாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாமதிக்காமல், சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றித்தர வேண்டும் என்று, விவசாயி முத்துராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 3 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்