சிவகங்கை மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா தொற்று
சிவகங்கை சிங்கம்புணரி தேவகோட்டை காரைக்குடி திருப்பத்தூர் மானாமதுரை திருப்புவனம் உள்ளிட்டபகுதிகளில் தொற்று ஏற்பட்டுள்ளது
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று இன்று மட்டும் 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவே கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 2வது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 901 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்றுக்கு இறப்பு எதுவும் இல்லை என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.