நேரடி கொள்முதல் நிலையம் துவங்க வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு,மாவட்டகௌரவ தலைவர்மணி தலைமை வகித்தார். மாநில இளைஞர்சங்க தலைவர் சுபாஷ் வரவேற்றார்,
வேலாயுதம், ஆதிமூலம, சம்பத்நாயுடு, அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில செயலாளர் உதயகுமார், மாநில போராட்டக்குழு தலைவர் ரகுபதி மற்றும் ராமதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் வெளிமார்க்கெட்டில் நெல்லுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. எனவே, மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் இரண்டு நவீன அரிசி ஆலைகள் அமைக்க வேண்டும் .,எனவும் விவசாயிகள் விளைவித்துள்ள நெல்லினை உலர வைத்து பாதுகாக்க போதிய உலர்களங்கள் மற்றும் நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க வேண்டும்.
மேலும், ,திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த நெல், குவிண்டாலுக்கு 2500ஐ உடனடியாக வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை உரிய நேரத்தில் கொண்டு செல்லாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திவரும் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் சுமார்200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.