கல்லூரி மாணவிகளுக்கு டூவீலர் ஓட்ட லைசன்ஸ்: டிஎஸ்பி வழங்கினார்
இராணிப்பேட்டையில் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு டூவீலர் ஓட்ட லைசன்ஸை டிஎஸ்பி பிரபு வழங்கினார்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனம் சார்பில் கல்லூரிபடித்து வரும் மாணவிகளுக்கு டூவீலர் ஓட்டும் லைசன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, இராணிப்பேட்டை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் முகேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, இராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு கலந்து கொண்டு லைசன்ஸை வாலாஜாப்பேட அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கினார். பின்புநிகழ்ச்சியில் பேசிய டிஎஸ்பி பிரபு, மாணவிகள் விபத்துகள் ஏற்படாதவாறு கவனமாக ஓட்டவேண்டும். வாகனங்கள் ஓட்டும்போது விதிமுறைகளைக் கட்டாயம் மதிக்கவேண்டும் . கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து தான் வாகனங்களை ஓட்டவேண்டும். மற்றவர்களையும் போட்டுகொண்டு ஓட்டும்படி கூறவேண்டும் என்றார்,
மேலும், மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், கூடவே வேலைவாய்ப்புக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தேவையான முயற்சிகளை எடுக்கவேண்டும், நுழைவுத்தேர்வுகளுக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள், தொண்டு நிறுவனத்தைச்சேர்ந்தவர்கள்,கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.