Begin typing your search above and press return to search.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் துவங்கபோகுது
வேலூரில் ஒருங்கிணைந்து இயங்கி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தகவல்
HIGHLIGHTS
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆகியவை தனி டிஜிபி தலைமையில் சென்னைமநகரம் மற்றும் மாநிலத்தில் 31 மாவட்டங்களில் இயங்கி வருகிறது. .
மாவட்டத்தில் டிஎஸ்பி தலைமையிலும் ,3மற்றும் 4மாவட்டங்கள் சேர்ந்த மண்டலங்களுக்கு எஸ்பியின் தலைமையில் இயங்கிவருகிறது.
கடந்த ஆட்சியில் வேலூரிலிருந்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இருப்பினும் காவல்துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை உட்பட சில பிரிவுகள் ஒருங்கிணைந்து வேலூரிலேயே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை பிரிக்கப்பட்டு இராணிப்பேட்டை மாவட்டத்தில் துவங்கப்பட உள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..