தலைமைக் காவலர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில், மணல் கடத்தலை தடுக்க சென்ற தலைமைக் காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் சுரேஷ் என்பவனுக்கு ராணிப்பேட்டை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளாற்றில் கடந்த 20- 7-2014 ஆம் ஆண்டு மணல் கொள்ளையை தடுக்க சென்ற தலைமை காவலர் கனகராஜ்(41) என்பவரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் சுரேஷ் (32) என்றவன் கைது செய்யப்பட்டான்.
இந்த கொலை சம்பந்தமான வழக்கு ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கொலைக் குற்றவாளியான சுரேஷ் என்பவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7,000 ரூபாய் ரொக்கப் பணம் செலுத்த தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து சுரேஷ் மருத்துவ பரிசோதனையை முடித்து வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
மணல் கொள்ளையை தடுக்க முயன்ற தலைமை காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில், கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.